ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை உடனடியாக கைது செய்க - அண்ணாமலை வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த அனைவரையும் உடனே கைது செய்து, சிறையில் அடைக்கவேண்டும் என, தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அறிக்கையில் அவர் கூறிவுள்ளதாவது,

கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல், வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாம்பு கார்த்திக் என்ற தி.மு.க.,வை சேர்ந்த நபர், கடந்த ஆண்டே ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

தி.மு.க., அமைச்சர்களுக்கும், நெருக்கமான நபரான கார்த்திக், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ரேஷன் அரிசியை வாங்க வேண்டும் என்று சிறுவர்களை கட்டாயப்படுத்துவதாக தெரிகிறது. அதை தட்டி கேட்ட வழக்கறிஞர் மாரிசெல்வம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிகிறது. கோவில்பட்டி சுற்று வட்டாரத்தில் மட்டும் மாதம், 3.50 டன் ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆளுங்கட்சி என்பதால் போலீசாரோ, உணவு கடத்தல் தடுப்பு பிரிவோ எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.ரேஷன் அரிசி கடத்துவது ஆளுங்கட்சியினர் என்பதால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, மேலும் பல குற்ற சம்பவங்களுக்கே வழிவகுக்கும்.

உடனே, தி.மு.க., அரசு, இந்த பாம்பு கார்த்திக் என்ற நபர் உள்ளிட்ட ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவுள்ளர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ration rice theft arrest immediately


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->