பள்ளி மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய தாய்மாமன்.. போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய தாய்மாமனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வடகோடி கிராமத்தை சேர்ந்த யாசகன் மகன் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் போர்டு டிசைனிங் வேலை செய்து வருகிறார்.

அவரது மாமன் மகள் வித்யா (வயது 16) இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது தாய் மாமனான ராஜதுரை கடைக்கு சென்று அவருக்கு உதவியாக அடிக்கடி வேலை பார்த்து வந்துள்ளார்.

 இதை பயன்படுத்தி அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் சிறுமி அவர்களது பெற்றவர்களிடம் கூறியதை எடுத்து அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெற்றது. 

ஆனால் திருமணத்திற்கு ராஜதுரை மறுப்பு தெரிவிக்க சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் ராஜதுரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The maternal grandfather tricked the schoolgirl and made her pregnant


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->