மூட்டு வலி பிரச்சனையா? இதை மட்டும் செய்து குடிங்க... வலி பறந்து போயிடும்.!
Ulundhu paal recipe in tamil
பொதுவாக வயதானவர்களுக்கு மூட்டு வலி இருப்பது வழக்கமான ஒன்று. அந்த காலங்களில் நமது முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டதால் மூட்டு வலி பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்தனர்.
ஆனால் இந்த காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இதனை சரி செய்யும் ''உளுந்து பால்'' எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு
நாட்டு சர்க்கரை
ஏலக்காய் தூள்
தேங்காய் துருவல்
உப்பு
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பை ஒரு கடாயில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். உளுத்தம் பருப்பு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்த உளுந்து மாவை கட்டி இல்லாமல் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனை அடுப்பில் மிதமான தீயில் வைத்து பத்து நிமிடம் நன்றாக தொடர்ந்து கிளறவும். பிறகு ஏலக்காய் தூள், சிறிதளவு உப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
இறுதியாக துருவிய தேங்காய் சேர்த்து இறக்கி பருகினால் அவ்வளவுதான் மூட்டு வலியை குணப்படுத்தும் சுவையான உளுந்து பால் தயார். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம்.
English Summary
Ulundhu paal recipe in tamil