பத்து ஆண்டு மோடி ஆட்சி ஒரு பொற்காலம்! உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டு!!
10 Years modi goverment is golden era
பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த பத்து ஆண்டு ஆட்சி பொற்காலம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டியுள்ளார்.
இன்று 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் தொடங்கியிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு ஒரு புதிய திசையை காட்டி யுள்ளதாகவும், அவரின் கடந்த பத்து ஆண்டுகால ஆட்சி ஒரு பொற்காலம் என்றும் கூறினார்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு துறையும் புதிய சாதனை படைத்தது வருகிறது. மேலும், இந்தியா அதி வேகமாக முன்னேறி வரும் பொருளாதார மையமாக உலக அரங்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது எங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆபத்தை விளைவிக்கும் விஷயங்களையே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கர்நாடகா காங்கிரஸ் அரசு, இஸ்லாமியர்களுக்கு ஓபிசி இட ஒதுக்கீட்டில் சலுகைகளை வழங்கியிருப்பது மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்களை எக்ஸ்ரே எடுப்போம் என்று காங்கிரஸ் கூறுகிறது, பரம்பரை வரியைப் பற்றியும் பேசுகிறது. முத்தலாக்கை மீண்டும் கொண்டு வருவோம் என்று கூறுகிறார்கள், இதை விட பெண்களுக்கு அவர்களால் என்ன அவமரியாதை செய்ய முடியும். ஏழை சாமானியர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பறிக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டால் பாஜக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று ஆதித்யாநாத் பேசினார்.
English Summary
10 Years modi goverment is golden era