சுவையான வெஜ் குருமா செய்வது எப்படி?
how to make veg kuruma soup
இட்டலி தோசை என்று அனைத்திற்கும் சட்னி சேர்த்து சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காமல் போயிருக்கும். அப்படி உள்ளவர்களுக்கு வெகு குருமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கேரட்
பீன்ஸ்
உருளைக்கிழங்கு
ஊறவைத்த பட்டாணி
இஞ்சி - பூண்டு விழுது
வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
பட்டை
கல்பாசி
கிராம்பு
கறிவேப்பிலை
மஞ்சள் தூள்
காஷ்மீரி மிளகாய்த்தூள்
மல்லித்தூள்
கரம் மசாலா தூள்
புதினா இலைகள்
கொத்தமல்லித்தழை
வெண்ணெய்
எண்ணெய்
உப்பு
தேங்காய்த்துருவல்
முந்திரி பருப்பு
சோம்பு
கசகசா
செய்முறை:-
கேரட், உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸ், வெங்காயம், தக்காளி உள்ளிட்டவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.
பச்சை மிளகாயை கீறிவைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் முந்திரி பருப்பு, சோம்பு, கசகசா மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கல்பாசி போட்டு வதக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதங்கியவுடன், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.
இதைத்தொடர்ந்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள், நறுக்கிய காய்கறிகள் மற்றும் ஊறவைத்த பட்டாணி சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். இதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மூடிவைத்து, இரண்டு விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் குக்கரைத் திறந்து அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். இதன் மேல் பொடியாக நறுக்கிய புதினா இலைகள், கொத்தமல்லி இலை மற்றும் வெண்ணெய் சேர்த்து கலந்து மூடிவைக்கவேண்டும். அவ்வளவுதான் சுவையான வெஜ் குருமா சூப் தயார்.
English Summary
how to make veg kuruma soup