கேள்வி எழுப்பிய பெண்கள்... அதற்கும் ''ஒன்றிய அரசு'' தான் காரணம் - பரபரப்பு கிளப்பிய உதயநிதி.!
central government responsible rise gold prices
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்காசியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சில பெண்கள் தங்கம் விலை தற்போது அதிகரித்துக் கொண்டே உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பா.ஜ.க அரசுதான் தங்கம் விலையை உயர்த்தியது. தங்கம் விலைக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் கிடையாது என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சில பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கு வரவில்லை என புகார் அளித்துள்ளனர். அதற்கு உதயநிதி,
இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த 70% பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் தேர்தல் முடிந்தவுடன் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
central government responsible rise gold prices