என் படங்களில் சாதி பெயர் ஏன் வருகிறது தெரியுமா? - கமல்ஹாசன் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் காட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை ஆதாரத்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

“மக்களுடன் கலக்காத அரசாக மத்தியில் இருக்கும் பாஜக அரசு உள்ளது. அனைத்து சித்தாந்தங்களும் மக்களுக்காக தான். இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று வெளிநாட்டு அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். நாங்கள் வீரர்கள், அதனால் களம் கண்டுள்ளோம்.

நாங்கள் இந்த தேர்தலில் தியாகம் செய்யாமல் வியூகம் செய்துள்ளோம். தன் வாழ்வை சமூகத்துக்கு கொடுத்து, குரலற்றவர்களின் குரலாக, பெருஞ்சிறுத்தையாக திருமாவளவன் இருக்கிறார். நான் அரசியலில் வருவதற்கு முன்பு சாதியம் என் எதிரி என்று கண்டுபிடித்தேன். ஆனால், என் படங்களில் சாதி பெயர் ஏன் வருகிறது என்று நீங்கள் நினைக்கலாம். குடியைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்றால், குடிகாரனை மையப்படுத்தி தான் எடுக்க வேண்டும். அதை போல தான் படங்களின் பெயர்களும் வைக்கப்படுகின்றன.

எத்தனை பேர் அடிமையாக உள்ளனர் என்பதை கண்டுபிடிக்கவே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கேட்கிறோம். ஆங்கிலேயர்கள் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு சனாதனவாதிகள் பதற்றம் அடைந்தார்கள். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. சமூக நீதிக்கு எதிராக பாஜக அரசு உள்ளது. அதனால், பானை சின்னத்தில் வாக்களித்து திருமாவளவனை வெற்றி பெற செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kamalhaasan election campaighn in chithambaram constituency


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->