தாய் கண்முன்னே துடிதுடித்து இறந்த சிறுவன் - ராணிப்பேட்டையில் சோகம்.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள, அரக்கோணம் அருகே எம்.ஆர்.கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். சோளிங்கரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவருடைய மனைவி மோனிஷா. இவர் தனது இரண்டாவது மகன் ஜோனத்தான் ராஜ் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு கடையில் குளிர்பானம் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

பின்னர் ஜோனத்தான்ராஜை வண்டியிலேயே நிற்க வைத்துவிட்டு குளிர்பானம் வாங்குவதற்குச் சென்றுள்ளார். அப்போது, ஜோனத்தான் ராஜ் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி தாயை நோக்கி ஓடியுள்ளார். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக ஜோனத்தான்ராஜ் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில், சிறுவன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்து குழந்தையின் தாய் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy died accident in ranipet


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->