தேர்தல் அதிகாரிகளுக்கு மிரட்டல் - திருப்பூர் பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, நாட்டில் தேர்தல் விதிகளும் அமலில் உள்ளன. 

அதனால், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் காரிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் போலீசாருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் காரில் வந்து கொண்டிருந்தார். 

உடனே அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் ஓரமாக நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இதனால், கோபமடைந்த ஏ.பி. முருகானந்தம் வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வைத்துவிடுவேன் என்று சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினரை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் பாஜக வேட்பாளர் ஏ.பி முருகானந்தம் மீது பறக்கும் படை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் படி திருப்பூர் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on tirupur bjp candidate for threat election squad officer


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->