ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த தம்பதி - நாமக்கல்லில் சோகம்.! - Seithipunal
Seithipunal


கணவன் இறந்த துக்கத்தில் இருந்த மனைவி அடுத்த மூன்று மணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். கூலி தொழில் செய்து வரும் இவருடைய மனைவி ராஜேஸ்வரி. குழந்தை இல்லாத இந்தத் தம்பதியினர் தனியாகவே வசித்து வந்தனர்.

இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த ராராயணன் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மனைவி ராஜேஸ்வரி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

அந்தத் தகவலின் படி உறவினர்கள் அவர்களது வீட்டிற்கு வந்துள்ளனர். கணவர் இறந்த துக்கத்தில் இருந்த ராஜேஸ்வரி, அடுத்த மூன்று மணி நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஒரே நாளில் அடுத்தடுத்து கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couples died at same day in namakkal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->