தேவை அதிகம், கிடைப்பது குறைவு...  முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுரை! - Seithipunal
Seithipunal


தமிழக மக்களுக்கு கோடைகாலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது  தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஆலோசனை நடத்தினார். 

இதில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மின்சாரத்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி,  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் பங்கேற்றனர். 

கோடைகாலத்தில்  எப்போதும் ஏற்படும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு 
அனைத்து துறையை  சேர்ந்தவர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், 
அதிமான  வெப்பம்,  அதிக அளவு குடிநீர் தேவையை கோடைகாலம்  ஏற்படுத்தும். இந்த காலத்தில் தண்ணீர் தேவையானது  அதிகமாக இருக்கும் . ஆனால் தண்ணீர் கிடைப்பது  மிக  குறைவு என்பதை நாம் மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று  மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். 

மேலும், வானிலை மையம் தெரிவித்துள்ள அறிக்கையில்,  தென்மேற்கு பருவமழை காலத்தில் , மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும் என்று  கூறியுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அணைகளில் சேமித்து வைத்துள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி வரும் இரண்டு மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டிய கடினமான சூழல் உள்ளதாகவும் தெரிவித்தார்.  

தமிழகத்தில் எங்கெல்லாம் குடிநீர் பிரச்சனை நிலவுகிறதோ அங்கெல்லாம் சென்று ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்றும்,  கூட்டு குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிப்பதோடு, தடையின்றி பராமரித்திட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

M K stalin meeting with minster for water problem


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->