வீட்டில் விளையாடியபோது நேர்ந்த விபரீதம்: கட்டிங் எந்திர உதவியுடன் சிறுமி மீட்பு! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி புத்திபிரியா. இவர்களுக்கு மிதுளாஸ்ரீ (வயது 2) என்ற மகள் உள்ளார். 

மிதுளாஸ்ரீ நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த சில்வர் தண்ணீர் பாத்திரத்திற்குள் இறங்கி உள்ளார். 

அப்போது மிதுளாஸ்ரீ எதிர்பாராதவிதமாக பாத்திரத்திற்குள் மாட்டிக் கொண்டு வெளியே வர முடியாமல் கதறி அழுதுள்ளார். அழுகை குரல் கேட்ட பெற்ற பெற்றோர் வந்து பார்த்தபோது குழந்தை பாத்திரத்திற்குள் மாட்டிக் கொண்டிருப்பதை கண்டு  அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் குழந்தையை வெளியே எடுக்க முயற்சி செய்தும் முடியாததால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாத்திரத்திற்குள் மாட்டியிருந்த குழந்தையை வெளியே எடுக்க முயற்சி செய்தனர். 

இதனை தொடர்ந்து கட்டிங் எந்திரத்தை பயன்படுத்தி பாத்திரத்தை இரண்டாக வெட்டி சிறுமியை பத்திரமாக மீட்டனர். 2 வயது குழந்தை பாத்திரத்திற்குள் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur girl stuck pot rescued cutting machine


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->