திருப்பூரில் நாளை டிரோன்கள் பறக்க தடை: காரணம் என்ன?
Tirupur tomorrow ban flying drones
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது,
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திருப்பூர், அவிநாசி வட்டம் வேலூர் கிராமத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக திருப்பூர் வர உள்ளார்.
முதலமைச்சர் வருகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட காவல் எல்லையில் நாளை எந்த வித ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Tirupur tomorrow ban flying drones