பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு... விஜய்வசந்த் எம்.பி. மீது பாய்ந்த வழக்கு.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகைக்கு எதிர்த்து தெரிவித்து தக்கலையில் காங்கிரஸ்சார் கருப்புக்கொடி ஏந்தி  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி., எம்.எல். ஏக்கள் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸர் பங்கேற்றனர். 

மேலும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த அதே பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். 

பிறகு கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட விஜய் வசந்த், எம்.எல்.ஏக்கள் உள்பட 217 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayvasanth against case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->