குடி போதையில் செய்யக்கூடாத செயலை செய்த கணவன்.! அலறித்துடித்த மனைவி.!  - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஷியோபுரம் பகுதியில் ஒரு கணவர் மது போதைக்கு அடிமையாகியுள்ளார். இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சென் என குறிப்பிடப்படும் அந்த கணவர் சம்பவ தினத்தன்று குடிபோதையில் மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். 

அன்று நல்ல மதுபோதையில் வீட்டிற்கு வந்த அந்த கணவர் மனைவியிடம் சென்று மது அருந்த பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார். குடும்பம் நடத்த உதவி செய்யாத கணவன் மது போதைக்கு மட்டும் எந்த உரிமையில் வந்து பணம் கேட்கிறான் என்ற ஆத்திரத்தில் மனைவி அவரிடம் கோபத்தை காட்டியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சென் மனைவியை அடித்து துன்புறுத்தி, அவரது கை, கால்களை கட்டி போட்டு அவரது பிறப்புறுப்பில் பெவி குயிக் பசையை வைத்து ஒட்டியுள்ளார். இதனால், மனைவி வலி தாங்காமல் கதறி அழ சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் சென் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mathyapradesh drunken Husband Harassed paste private part of wife


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->