70 ஆண்டுகளாக மக்களை அடிமையாக வைத்திருக்கிறார்கள் - எல். முருகன் தாக்கு.!
L Murugan Nilgiri campaign
நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல். முருகன், மேட்டுப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர்,
பிரதமர் நரேந்திர மோடி ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 70 ஆண்டுகள் ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் இன்னும் அடிமையாக தான் நம்மை வைத்திருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக பட்டியல் இன மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், இலவச கியாஸ் இணைப்பு போன்ற பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒரு சிலர் ஏழை மக்களுக்கு தரப்படும் தண்ணீர் இணைப்புக்கு லஞ்சம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் மயான வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
L Murugan Nilgiri campaign