அமைச்சர் தா.மோ அன்பரசனுக்கு 300 சாக்லேட் மாலை..சாக்லேட்டுகளை திருடி சென்ற திமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

அதனால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வத்தை ஆதரித்து  சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் காட்டாங்குளத்தூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நெடுங்குன்றம் கிராமத்தில் ஓட்டு கேட்டு சென்ற அமைச்சர் தா.மோ அன்பரசனுக்கு வித்தியாசமான முறையில் கிராம திமுக நிர்வாகிகள் 300 கிலோ எடையில் கொண்ட சாக்லேட் மாலையை தயாரித்து கிரேன் மூலம்  அமைச்சர்  தா.மோ அன்பரசனுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

அமைச்சர் தா.மோ அன்பரசன் வேட்பாளர் ஜி.செல்வத்தை ஆதரித்து பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் அமைச்சருக்கு அணுவித்த சாக்லேட் மாலையில் இருந்து சாக்லேட்டுகளை முண்டியடித்துக் கொண்டு போட்டி போட்டு உருவி எடுத்த சென்ற சம்பவம் அப்பகுதியில் திமுக நிர்வாகிகள் இடையே பெரும் அருப்தியை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Thamo Anbarasan chocolate garlands


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->