எடப்பாடிக்கும் சீமானுக்கும் தான் போட்டியே.. பங்கம் செய்த ஓபிஎஸ் தரப்பு.!!
Ops team criticized competition bw eps and seeman in election
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் அணியின் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் "எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி இல்லாமல் அதிமுக ஒன்றிணையும். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் சீமானுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே தான் போட்டி நடைபெறும்.
பாஜக உடன் விசுவாசத்திற்காக மூன்றாவது முறை மோடி பிரதமராக வேண்டும் என்பதை மனதில் வைத்து ஆதரவு அளிப்பது என முடிவெடுத்துள்ளோம். எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரை வந்தாலே பதற்றம்தான் படபடப்பு தான். அந்த வகையில் அவர் வாயாலேயே தவழ்ந்து வந்து பதவி பெற்ற உண்மையை கூறியிருக்கிறார்.
இதேபோன்று கூவத்தூரில் என்ன நடந்தது, கொட நாட்டில் என்ன நடந்தது என்பதை அவர் வாயாலயே சொல்வார். எங்கள் அணி பாஜகவுடன் கூட்டணி அமைப்பது உறுதி" என தெரிவித்துள்ளார்.
English Summary
Ops team criticized competition bw eps and seeman in election