அரியலூரில் பதற்றத்தை ஏற்படுத்திய பா.ஜ.க.வினர்: அதிரடி கைது!
Ariyalur protested BJP arrest
அரியலூர், பனங்கூர் கிராம சாலை சேதமடைய காரணமாக இருந்த டால்மியா சுண்ணாம்பு கல் சுரங்கத்தை கண்டித்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர், பெரியதிருக்கோணம் கிராமத்தில் டால்மியா சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்பு கல் சுரங்கம் உள்ளது.
இதனால் பனங்கூர் கிராம சாலை பகுதியில் கனரக வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுவதால் அங்குள்ள சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பா.ஜ.க மாநில துணை செயலாளர் தலைமையில், மாவட்ட தலைவர் முன்னிலையில் அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவித்தனர்.
அதன்படி பா.ஜ.கவினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தபோது காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் பா.ஜ.கவினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 146 பேரை கைது செய்தனர்.
English Summary
Ariyalur protested BJP arrest