சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த பார்சல்: திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு ஷாக்.!
Chennai airport garbage bin inside gold
சென்னை, விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது கழிவறையின் அருகே இருந்த குப்பை தொட்டியில் பார்சல் ஒன்று கிடந்ததை பார்த்துள்ளனர்.
இது குறித்து உடனடியாக விமான நிலையம் மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குப்பை தொட்டியில் வெடிகுண்டு ஏதாவது இருக்குமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதில் நான்கு தங்க கட்டிகள் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து நான்கு தங்க கட்டிகளை பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மொத்த மதிப்பு ரூ. 85 லட்சம் எனவும் மொத்த எடை ஒரு கிலோ 250 கிராம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
English Summary
Chennai airport garbage bin inside gold