விபத்தில் சிக்கியவர்கள் உயிரைக் காப்பாற்றிய அமைச்சர்.! திண்டுக்கல்லில் பயங்கரம்.!
minister periyasami rescue accident peoples in dindukal
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, செம்பட்டியை அடுத்த ஆதிலட்சுமிபுரம் அருகே நேற்று மாலை காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தனர். அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்குத் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது, தேனியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமியின் கார் இந்த இடத்தைக் கடந்து சென்றது. உடனே அமைச்சர் பெரியசாமி தனது வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் உடனடியாக மீட்பு வாகனத்தை வரவழைத்து பேருந்துக்குள் சிக்கிய காரை மீட்கத் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் குறித்து செம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் நடந்த விபத்தை பார்த்து உடனே கீழே இறங்கி உதவிகளை செய்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் செயலைக் கண்டு அப்பகுதியினர் நெகிழ்ச்சியடைந்தனர்.
English Summary
minister periyasami rescue accident peoples in dindukal