திருவாரூர் | ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட உத்தரவு!
Tamilnadu Thiruvarur ONGC issue
திருவாரூர் மாவட்டம் பெரியகுடி பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை நிரந்தமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெரியகுடியில் உள்ள எண்ணெய் குழாயில் 2013ல் அதிக அழுத்தத்துடன் வாயு வெளியேறியதால் பணிகளை ஓ.என்.ஜி.சி. நிறுத்தியது.
இந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன் பெரியகுடி பகுதியில் எண்ணெய் எடுக்கும் பணிகளை மீண்டும் ஓ.என்.ஜி.சி. தொடங்கியது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்,
இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கிய பின்னர் எண்ணெய் கிணறுகளை மூடும் பணிகளை தொடங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 39 நாட்களுக்குப் பிறகு கிணற்றினை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamilnadu Thiruvarur ONGC issue