நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..!
Actor Ajith Kumar has been admitted to the hospital
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பத்ம பூஷன் விருது பெற்ற பிரபல நடிகர் அஜித்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் எப்போதும் சினிமா ஷூட்டிங், கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல், பிரியாணி சமைத்தல் என எப்போதும் தன்னை பிசியாகவே வைத்திருப்பவர்.
அவருக்கு நேற்று முன்தினம் ஜனாதிபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தார். இதனையடுத்து நேற்று அஜித்குமார் சென்னை திரும்பி இருந்தார். அப்போது திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் அஜித் காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அண்மையில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை நடந்த நிலையில், அது தொடர்பான அடுத்தக்கட்ட பரிசோதனைக்காகவும், நேற்று ஏற்பட்ட காயம் காரணமாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனைறிந்த அஜித்குமார் ரசிகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். ஆனால், அஜித்குமார் மருத்துவமனையில் அஜித் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து எந்த வித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் அவரது தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Actor Ajith Kumar has been admitted to the hospital