#BREAKING | சந்திரயான்-3 தரையிறங்கும் நேரம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ! - Seithipunal
Seithipunal



உலகமே எதிர்நோக்கி இருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தில் செலுத்தப்பட்ட லேண்டர் தரையிறங்கும் நேரம் குறித்து சற்றுமுன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலமானது விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவா் சாதனமும் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.

இந்த நிகழ்வை மாலை 5.20 முதல் இஸ்ரோ நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதுவரை அனைத்து செயல்பாடுகளும் திருப்திகரமாக இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சந்திரயான்-3 குறித்து சறுமுன் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், 

"சந்திரயான்-3 தானியங்கி தரையிறங்கும் வரிசையை தொடங்க அனைத்தும் தயாராக உள்ளன.


5.44 மணிக்கு, நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் தரையிறக்கும் பணி தொடங்கும். 

மிஷன் ஆபரேஷன்ஸ் குழு கட்டளைகளின் வரிசையான செயல்பாட்டை உறுதிசெய்து கொண்டே இருக்கும்.

இந்த செயல்பாடுகளின் நேரடி ஒளிபரப்பு மாலை 5:20 மணி நேரத்தில் தொடங்க உள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chandrayaan3 Mission isro latest update


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->