காஞ்சிபுரம் : பிறந்தநாள் கொண்டாட சென்ற கல்லூரி மாணவர் - பிணமாக வீட்டிற்கு வந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


பிறந்தநாள் கொண்டாட சென்ற கல்லூரி மாணவர் - பிணமாக வீட்டிற்கு வந்த சோகம்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் மகன் மோகன்ராம். இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இவருக்கு பிறந்தநாள்.

அதனை கொண்டாடும் விதமாக மோகன்ராம் தனது கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம் பள்ளி பாலாற்றில் குளிப்பதற்காகச் 
சென்றுள்ளார். அங்கு அனைவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது மோகன்ராம் மட்டும் திடீரென நீருக்குள் மூழ்கி உள்ளார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் மோகன்ராமை தேடி கண்டுபிடித்து கரைக்கு இழுத்து வந்தனர். அதன் பின்னர் மோகன்ராமின் நண்பர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை சார்பில் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி அவர்கள் விரைந்து வந்து மோகன்ராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

college student died for drowned river in kanchipuram


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->