கர்நாடகாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. தேசிய நில அதிர்வு மையம்.!
Earthquake in Karnataka 3.5 rictor measurement
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது இன்று காலை 7.45 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், அங்குள்ள தட்சிண கன்னடா மாவட்டத்லும் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. இங்கு 2.3 ரிக்டர் அளவுகோலில் நில அதிவானது ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
English Summary
Earthquake in Karnataka 3.5 rictor measurement