காலையிலேயே சோகம்... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 4 பேர் உயிரிழப்பு.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal



இமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் உள்ள ஜுப்பால் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த பேருந்தில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் 5 பயணிகள் உள்பட மொத்தம் 7 பேர் இருந்தனர். இன்று காலை 6:45 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த விட்டனர். 

விபத்து குறித்து தகவல் அறியும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இருப்பினும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.  

தற்போது மருத்துவமனையில் 3 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Himachal Pradesh bus accident 4 killed


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->