பஹல்காம் தாக்குதலின் பின்னணி:லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய புள்ளி: என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதி..! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கிய புள்ளி பெரும் பங்கு வைத்திருப்பது என்.ஐ.ஏ., விசாரணையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் மற்றும் அவர்களுக்கு உதவியதாக கூறப்படும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாண்டிபோரா, சோபியான், புல்வாமா பகுதிகளில் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கினர். என்.ஐ.ஏ., தீவிர விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, பஹல்காம் தாக்குதலில் முக்கிய பங்கு வைத்திருப்பது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கிய புள்ளியான பரூக் அகமது என்பது தெரிய வந்துள்ளது.

இவன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கியுள்ளான். ஸ்லீப்பர் செல் நெட்வொர்க் மூலமாக கடந்த 02 ஆண்டுகளில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அதில் பஹல்காம் தாக்குதலும் அடங்குவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இவன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல கடினமான பாதைகளை நன்கு அறிந்து வைத்துள்ளதோடு, பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதில் முக்கிய பங்கு இவனுக்கு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் பல்வேறு நவீன தகவல் தொழில்நுட்ப செயலிகள் மூலம் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்தே தொடர்பு கொண்டு சதி திட்டங்களை அரங்கேற்றியுள்ளான் என என்.ஐ.ஏ., நடத்திய விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lashkar e Taiba key point behind the Pahalgam attack NIA confirmed in the investigation


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->