அரசு வீட்டை காலி செய்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.!  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாஹுவா மொய்த்ரா, கிருஷ்ணா நகர் எம்.பி. ஆக இருந்தார். 

இவர் மீது, அந்தாணி குழுமத்தையும் பிரதமர் நரேந்திர மோடியையும் தொடர்பு படுத்தி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. 

இது தொடர்பாக பாராளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. 

இதனை அடுத்து மாஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டதால் புதுடெல்லியில் உள்ள அரசு வீட்டை காலி செய்ய மக்களவைச் செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

இதனை தொடர்ந்து அரசு எஸ்டேட் இயக்குனராகமும் நோட்டீஸ் அனுப்பியதால் மாஹுவா மொய்த்ரா இதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அந்த வழக்கு தள்ளுபடி செய்த நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மாஹுவா மொய்த்ரா இன்று காலி செய்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mahua Moitra vacates official bungalow


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->