திருமண நிகழ்ச்சியில் நேர்ந்த விபரீதம்... சிறுவர்கள் உள்பட 5 பேர் பரிதாப பலி.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், ஜபல்பூர் மாவட்டத்தில் தர்மேந்திர தாகூர் என்ற இளைஞர் திருமண நிகழ்ச்சிக்கு டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்று கொண்டிருந்தனர். 

டிராக்டரில் 5 சிறுவர்கள் உடன் இருந்தனர். அப்போது டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் டிராக்டரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் உள்பட 5 பேர் உயிரிழந்து விட்டனர். 2 சிறுவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MP tractor overturns accident 5 killed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->