கர்நாடகா || கோவிலில் தலித் குடும்பத்தினரை விரட்டி அடித்த அர்ச்சகர்.! வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் மாவட்டத்தின் நிட்டூர் கிராமத்தில் முளுகாட்டம்மா கோயில் உள்ளது. இந்த கோயிலில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கோவிலுக்கு பூஜை செய்வதற்கு மாலை, தேங்காயுடன் சென்றனர். 

அப்போது கோவிலில் இருந்த அர்ச்சகர் அவர்களை உள்ளே வராமல் தடுத்து நிறுத்தி, கோயிலை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியதுடன், கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது என்றும் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதையடுத்து, தலித் குடும்பத்தினர் ஏன் கோயிலுக்குள் வரக்கூடாது என்று கேள்வி எழுப்பிய போது, உங்களுக்கு எல்லாம் பூஜை செய்ய முடியாது என்றுக்கூறி, விரட்டி அடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு குறித்து கோயிலில் இருந்த ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தும்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோயிலில் வழிபாடு செய்ய வந்த தலித் குடும்பத்தினரை வெளியே போக சொன்ன அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near karnataka priest drive away dalit family going to temple


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->