சர்வதேச யோகா தினம் :காஷ்மீரில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு! - Seithipunal
Seithipunal


சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி காஷ்மீரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. இதனை அடுத்து 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த நிலையில் பத்தாவது சர்வதேச யோகா தினம் வரும் 21ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஸ்ரீநகர் தாள் ஏரிக்கரையில் உள்ள சரி காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து யோகா பயிற்சி செய்ய உள்ளனர் என கவர்னர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Narendra Modi participates in a yoga program in Kashmir


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->