11 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் ஜூன் 4 தேதியான நாளை எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று முன் தினம் ஜூன் 1 நடந்த கடைசி கட்ட தேர்தலின்போது பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது.

அதனால், இந்த இரண்டு தொகுதிகளுக்கு மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பராசத் தொகுதியில் 420 வாக்குச் சாவடிகளிலும், மதுராபூர் தொகுதியில் 11 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

re election in 11 booths at west bengal


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->