காஷ்மீரில் திடீர் குண்டுவெடிப்பு: கேப்டன் உள்பட 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்!
Two soldiers, including a captain, were killed in a blast in Jammu and Kashmir.
காஷ்மீரில் உள்ள அக்னூர் செக்டார் என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடித்ததில் கேப்டன் உள்பட 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளை அடக்க இந்திய ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.இந்தநிலையில் காஷ்மீரில் உள்ள அக்னூர் செக்டார் என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு குண்டு வெடித்தது.இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அப்போது அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
![](https://img.seithipunal.com/media/4lyi6v66-45uxv.png)
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த கேப்டன் உள்ளிட்ட 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்ற தகவலை இந்திய ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ் படைப்பிரிவினர் உறுதிசெய்தனர். இந்த சம்பவம் காஷ்மீரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் எல்லைப் பகுதியில் கடந்த 4 நாளில் நடைபெற்ற 3-வது தாக்குதல் சம்பவம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Two soldiers, including a captain, were killed in a blast in Jammu and Kashmir.