நிச்சயதார்த்த விழாவில் மாப்பிள்ளை மீது இளம்பெண் திரவாக வீச்சு - இதுதான் காரணமா?
woman arrested for attack boy in uttar pradesh
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பால்லியா மாவட்டம் சிகிடாவுனி கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் பிந்த் என்பவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது அதே ஊரை சேர்ந்த லட்சுமி என்ற இளம்பெண் அங்கு வந்தார்.
உடனே அவர் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திராவகத்தை திடீரென மாப்பிள்ளை மீது, வீசினார். இதில் ராகேஷின் முகம் மற்றும் சில இடங்களில் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராகேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அங்கிருந்தவர்கள் லட்சுமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். உடனே போலீசார் இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், லட்சுமி, ராகேஷை விரும்பி வந்ததாகவும், அவர் வேறு பெண்ணை திருமணம் செய்ய இருந்ததால் அதிருப்தி அடைந்த லட்சுமி, அவர் மீது திராவகம் வீசியதும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
woman arrested for attack boy in uttar pradesh