சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்: 5 பேர் பரிதாப பலி! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட், டேஹ்ராடூன் மாவட்டத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரகாண்ட் ஜாதிபானி சாலையில் உள்ள முசோரி டெஹ்ராடூன் மார்க்கில் உள்ள பானிவாலா பேண்ட் அருகே இந்த விபத்து நடைபெற்றது. 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்து குறித்து காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருப்பதாவது, கார் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விட்டனர். 

ஒரு மாணவர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஐ எம் எஸ் கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள், 2 மாணவிகள் உள்பட ஏழு பேர் சுற்றுலா சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uttarakhand car accident 5 people killed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->