#கடலூர் || தடையை மீறி என்.எல்.சிக்கு எதிராக அதிமுக எம்எல்ஏ உண்ணாவிரதப் போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி நிறுவனம் நிலக்கரி பற்றாக்குறையை காரணம் காட்டி வளையமாதேவி மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இரண்டாம் கட்ட நிலக்கரி சுரங்கம் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக விவசாய நிலங்கள் மத்தியில் பயிர்களை அழைத்து கால்வாய் அமைக்கும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. என்எல்சி நிர்வாகத்தின் அராஜக நடவடிக்கைக்கு கடலூர் மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி என்எல்சி நிர்வாகம் ஐந்தாவது நாளாக கால்வாய் அமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தலைமையில் வளையமாதேவியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததோடு சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு கடிதம் வழங்கினர்.

ஆனால் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என காவல்துறை தெரிவித்ததால் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக புவனகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் நேற்று அறிவித்தார். அந்த வகையில் இன்று காலை முதல் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் என்எல்சி நிர்வாகத்தின் அராஜக போக்கை கண்டித்து அதிமுக எம்எல்ஏ அருண்மொழிதேவன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் வளையமாதேவி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். தலையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிறைவு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK MLA arunmozhidevan on hunger strike against NLC


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->