பெரும்பாலும் கோவில்கள் மற்றும் திருத்தலங்கள் உயரமான இடத்தில் இருப்பதற்கு இப்படி ஒரு காரணமா.?! - Seithipunal
Seithipunal


கோயில்களை ஏன் மலைகளிலும், உயரமான இடங்களிலும் அமைக்கிறார்கள்?

மலை ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது.

இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது.

தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில் மற்றும் கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்து நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது.

இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலம், மலைகோட்டை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

துளசி செடியை வணங்குவதற்கான காரணம் என்ன?

துளசி இலை மருத்துவ குணம் உடையது என்பது அனைவரும் அறிந்ததே. அச்செடி சளியை நீக்குவது மட்டுமின்றி, அதிக யவெiடிழைவiஉ-யையும் கொண்டதாம். இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. வீட்டில் துளசி செடி வைப்பது கொசு, பூச்சி ஆகியவற்றை வருவதை தடுக்கும். மேலும் பாம்பு வருவதை தடுக்கும் தன்மையை கொண்டது. துளசி செடியை வணங்குவதற்கான காரணம் இதுதான்.

பூஜையின் போது பட்டு எதற்கு அணிகிறார்கள்?

பட்டுக்கு மின்காந்த சக்தியை ஈர்க்கும் மற்றும் வெளியிடும் ஆற்றலை உடையது. நம் உடலுக்கும், நாம் உடுத்தி இருக்கும் பட்டு உடைக்கும் இருக்கின்ற நிலையான உராய்வு மின்காந்த சக்தியை உருவாக்கும். இவ்வாறு உருவாகும் ஆற்றலால் மன அமைதி ஏற்படும். அதனால்தான் பூஜையின்போது பட்டு அணிகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why temples in mountain


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->