இரட்டிப்பு மகிழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்.! வாழ்த்துக்களை தெரிவிக்கும் சென்னை ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


15வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடருக்கான வீரர்களின் ஏலம், நேற்று பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தொடங்கியது. இன்று 2-வது நாளாக ஏலம் நடந்து கொண்டிருக்கிறது.

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சாஹரை 14 கோடி ரூபாய் கொடுத்து, மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. 

மேலும், இன்றைய 2-வது நாள் ஏலத்தில் இந்திய வீரர் ஷிவம் துபேவை 4 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருப்பது மற்றற்ற மகிழ்ச்சியை அளிப்பதாக ஷிவம் டுபே தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஷிவம் துபேவுக்கு  இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சென்னை அணியில் இடம் பெற்றிருப்பதும், அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்து இருப்பதும் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும், ஷிவம் துபேவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள்  தங்களது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

avesh khan happy for csk


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->