சென்னையில் மீண்டும் பயங்கரம்... விஷவாயு கசிவால் 13 ஊழியர்கள் மயக்கம்.!! - Seithipunal
Seithipunal


 

சென்னை ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியர்கள் வழக்கமான  பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது குளிர்சாதன  இயந்திரத்தில் இருந்து வெளியேறிய விஷவாயுவால் 13 பேர் மயக்கம் அடைத்துள்ளனர்.

இதனை அடுத்து அனைவரும் சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில்  போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

கடந்த மாதம் சென்னை எண்ணூரில் அமைத்துள்ள கோரமண்டல் உர ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிந்ததில் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்க பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தனியார் நிறுவனத்தின் குளிர்சாதன இயந்திரத்தில் இருந்து விஷவாயு வெளியேறி 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில்  பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

13 employees fainted due to gas leak in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->