காதலுக்கு இடையூறு செய்த காதலியின் அண்ணன்... அரிவாளால் வெட்டிய காதலன் உட்பட 4 பேர் கைது...! - Seithipunal
Seithipunal


சென்னையில் காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் அண்ணனை அரிவாளால் வெட்டிய காதலன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மேடவாக்கம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் விஜய்(23). இவரது தங்கையை பெரும்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் (26) என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் ராஜேஷ் மீது காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளது என்று ஆதாரங்களுடன் மைக்கேல் விஜய் தங்கயிடம் தெரிவித்துள்ளார். இதனால் மைக்கேல் விஜயின் தங்கை, ராஜேஷுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதனால் மைக்கேல் விஜய் மீது ஆத்திரம் அடைந்த ராஜேஷ், சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து மைக்கேல் விஜயை, அறிவாளால் தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மைக்கேல் விஜய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ராஜேஷ், அவரது நண்பர்களான பாரத் (24), விக்னேஷ் (21) மற்றும் ஆகாஷ் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 people arrested including the boyfriend who cut his girlfriend brother with a sickle in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->