ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக ஆவின் நெய் விலை உயர்வு..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் பொது மக்களுக்கு பால் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் மூலமாக பால், நெய், வெண்ணெய், பால் பவுடர், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொழுப்பு நிறைந்த பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு பலதரப்பட்ட மக்களும் அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பால் விலையை தொடர்ந்து ஆவின் நிறுவனத்தின் நெய் விளையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் 5 லிட்டர் ஆவின் நெய் பாட்டிலின் விலை 2,900 ரூபாயிலிருந்து 3,250 ரூபாயாகவும், 1 லிட்டர் ஆவின் நெய் விலை 580 ரூபாயிலிருந்து 630 ரூபாயாகவும், 500மி.லி ஆவின் நெய்யின் விலை 290 ரூபாயிலிருந்து 315 ரூபாயாகவும், 200மி.லி ஆவின் நெய் 130 ரூபாயிலிருந்து 145 ரூபாயாகவும், 100மி.லி ஆவின் நெய் 70 ரூபாயிலிருந்து 75 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வுக்கான உத்தரவினை ஆவின் நிறுவன நிர்வாக இயக்குனர் சுப்பையன் பிறப்பித்துள்ளார். ஆவின் நெய்யின் புதிய விலை இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இரண்டாவது முறையாக ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aavin Ghee price hike for the second time in a year


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->