"என் தங்கச்சியை எப்படிடா காதலிப்ப.?" துண்டு துண்டாக வெட்டி புதைத்த அண்ணனின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில்   நண்பர்களே இளைஞரை கொன்று ஆற்றில் புதைத்த சம்பவம் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள முல்லை வாசலைச் சார்ந்தவர் திருமாவளவன். இவரை காணவில்லை என இவரது பெற்றோர்  முல்லைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் முல்லையாற்றின் கரையில் திருமாவளவன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தது திருமாவளவன் தான் என விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருமாவளவனின் நண்பர்களான ஸ்ரீதர் மற்றும் சபரீசன் ஆகியோரை காவல்துறை கைது செய்து இருக்கிறது‌.

மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருமாவளவன் அவர்களது தங்கையை சிறு வயது முதலே காதலித்து வந்ததாகவும் இந்நிலையில்  அவர் தங்கையை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அப்போதும் தொடர்ந்து திருமாவளவன் அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் தனது நண்பர் மற்றும் மைத்துனரான சபரீசன் உடன் சேர்ந்து  திருமாவளவனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து அவரது உடலை  கோரையாற்றில் புதைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

brother killed a man who talked wih her sster after marriage


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->