கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மீளவிட்டான் வடக்கு தெருவை சேர்ந்த ஜெகநாதன் என்பவருடைய மகன் ஜெகதீஷ் (21). 

இவர் கே.டி.சி.நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில் ஜெகதீஷ் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. 

இதுயடுத்து காவல்துறையினர் ஜெகதீஷை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cannabis seller arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->