தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் குழுமிக்கரை கல்லங்காடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார், கல்லங்காடு பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், அவர் திருச்சி புதூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (26) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து தப்பி ஓடிய கோபி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தினேஷ் குமாரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cannabis seller arrest in Trichy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->