#திருநெல்வேலி || விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் போலீசார் கொங்கந்தான்பாறை விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது சந்தேகத்திற்கிடமளிக்கும் விதமாக அப்பகுதியில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில், அவரிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், முன்னீர்பள்ளம் செங்குளத்தை சேர்ந்த கருப்புசாமி(28) என்பதும், விற்பனைக்காக 150 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கருப்புசாமியிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cannabis seller arrested in Tirunelveli


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->