இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது - பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


வருகிற ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

"இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கும் வாய்ப்புள்ளது. தேர்தல் நேரத்தில், எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற நாங்கள் ஆதரவு அளிப்போம்.

 

வரும் 11 ஆம் தேதி ஜே பி நட்டாவை சந்திக்கும் திட்டம் உள்ளது. இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. வரும் 24ம் தேதி சசிகலா கொடுக்கும் விருந்துக்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் கட்டாயம் கலந்து கொள்வேன்.

அதிமுக கரைவேட்டி, கொடி பயன்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் அதிக அளவில் உள்ளது. பாஜகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை" என்று அவர் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

formar cm o pannneer selvam press meet


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->