திருவிழா பார்க்கச் சென்ற சிறுவன்... 4 நாட்களுக்குப் பிறகு காவிரி ஆற்றில் பிணமாக மீட்பு..! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் திருவிழா பார்க்கச் சென்ற சிறுவன் 4 நாட்களுக்குப் பிறகு காவிரி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மணிவண்ணன். இவரது மனைவி ரேவதி. இவர்களுடைய மகன் சரவணன் (11), கடந்த நான்காம் தேதி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சர்க்கார்பாளையம் பகுதியில் நடைபெற்ற பால்குடம் ஊர்வலத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதையடுத்து வெகு நேரமாகியும் சரவணன் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்து உள்ளனர். ஆனால் சரவணன் கிடைக்காததால் இது குறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை கீழமுல்லக்குடி காவிரி ஆற்றில் சிறுவன் உடல் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், அது காணாமல்போன சரவணன் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Four days later the boy was rescued from the kaveri river in Trichy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->