சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்தவர் கைது - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திரும்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் ஆம்பூர் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கென்னடிகுப்பம் ரயில் ரோட்டில் உள்ள கருணாகரன் (40) என்பவரது கடையில் சோதனையை மேற்கொண்டதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்த 65 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கருணாகரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gutka seller arrested in tirupattur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->