தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் ஒட்டர்கரட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக கடத்தூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து கடத்தூர் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஏராளமான குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2600 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கோவை ரோஸ்கார்டன் பகுதியை சேர்ந்த வேணு (37) என்பவரை கைது கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gutkha seller arrest in erode


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->